மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி இவர்.. முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி இவர்.. பெண்ணுரிமைக்கு முன்னுரை எழுதி, பெண்ணடிமைக்கு முடிவுரை எழுதியவர்... சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி இவர்... இறுதிவரை உழைத்து, உறுதியாய் இருந்தவர்.. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், பகுத்தறிவித்தவர் இவர்.. இடுப்பில் கட்டிய துண்டை, தோளில் தொங்க போட வைத்தவர் இவர்.. ஆயுதமும், காகிதமும் பூசை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று பொங்கியவர்.. விதியை நம்பி மதியை இழக்காதே என்று எச்சரித்தவர் இவர்... தமிழ்நாட்டின் தன்நீகரில்லா தன்மான தலைவர் இவர்... நெடுமரமாய் காய்ந்து, நெடுஞ்சான் கிடையாய் வாழ்ந்து, வசம்போல் சுருண்டு கிடந்த நம்மை... சுயமரியாதை சுடராய் தலைநிமிர செய்தவர்.. இவர்... தந்தை பெரியார்... கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பெரியாரை பற்றியும், பெரியாரின் வரிகளையும் தெரிந்துகொள்வோம்.. வடக்கில் ஒரு பெரியார் இல்லாமல் போனதின் விளைவை பார்க்கிறேன் !! என்கிறார் - இட ஓதுக்கீடு போராட்டத்தின் போது வி.பி.சிங்...