நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

அன்று பல வீட்டு வாசல்களில், ஒரு கறுப்பு கயிற்றில்,
படிகாரம், மிளகாய், மிளகு, எலுமிச்சம் பழம், ஈச்சமுள், மஞ்சள் மற்றும் தேங்காய் பொருட்களை ஒரு கருப்பு கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.


இது, கண் திருஷ்டிக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு என்று நினைத்திருப்போம். ஆனால் இது நம் உயிரை காக்க உதவும், முதலுதவி பெட்டி.

விஞ்ஞானம் வளராத மற்றும் மின்சாரம் இல்லாத அக்காலத்தில்,
இரவில் வெளியில் சென்று வரும்போது, ஏதேனும் விஷ பூச்சிகளோ, பாம்போ கடித்து விட்டால்,  உடனே முதலுதவி செய்யதான் இந்த பொருட்கள் அடங்கிய அந்த மருத்தவ கயிற்றை, வீட்டு வாசலில் தொங்க விட்டு இருந்தார்கள், நம் முன்னோர்கள்...

கைகளிலோ அல்லது கால்களிலோ விஷ பூச்சிகள் கடித்துவிட்டால், விஷம் மேலும் உடலில் பரவாமல் தடுக்க, கயிற்றால் கட்டி, கடி வாயில் படிகாரத்தை தேய்ப்பார்கள். இதனால் உடலில் எரிச்சல் குறையும்.

விஷக் கடியாக இருந்தால், மிளகாய் அல்லது மிளகை சுவைக்கும் போது, காரம் இல்லையென்றால் கடுமையான விஷக்கடி என்றும், காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்து கொள்வார்கள்.

விஷப் பூச்சி கடிப்பதால் ஏற்படும் களைப்பை போக்க, எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொடுப்பார்கள்.

அதன் பின் அது எந்த மாதிரியான விஷக்கடி என்பதை அறிய, ஈச்ச முள்ளால் அந்த இடத்தை கீறி பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

தேள் அல்லது எட்டுகால் பூச்சி கடித்து இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து, தேங்காய் சில்லை தின்றால், உடனடி விஷ முறிவு ஏற்படும்.
சாதாரண ரத்த கட்டி வீக்கமாக இருந்தால், மஞ்சள் தடவி விடுவார்கள்.

எனவே தெரிந்து கொள்ளுங்கள்..
தொங்கிக் கொண்டு இருப்பது, மூடநம்பிக்கையின் சின்னம் அல்ல.
அது, முதலுதவி பெட்டகம் என்று...

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...


Comments

  1. அருமையான கட்டுரை... மிக்க மகிழ்ச்சி.
    தமிழன் பெருமை சேர்க்கும் வகையில் இது உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி