நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே...
தோல்வி என்றாவது, எதற்காவது, எப்போதாவது நம்மை தீண்டாமல் விடுவதில்லை. தோல்வியும் ஒரு சக்தி தான். அது தரும் நம்பிக்கை அபரிதமானது. அதை உணர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய சாதனையாளர்கள். தோல்வியை கண்டு பயந்து, துவந்து, தோய்ந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு நம்பிக்கையை தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. கொஞ்சம் நினையுங்கள்.... காத்திருந்து, புரண்டு, தவழ்ந்துதானே முயற்சித்தோம் முதலடிக்கு... தடுமாறி விழ விழ, அடிகள் பட்டுப் பட்டுத்தானே கற்றுகொண்டோம் மிதிவண்டியை... அறியாத போதே நமக்குள்ளிருந்த முயற்சி... இப்போது மட்டும் நமக்குவரலாமோ அயர்ச்சி... ஓட்டப்பந்தயத்தில் கூட, முதலில் வந்தவனை விட்டு மூன்றாமிடத்தில் வந்தவனுக்குதான் முதலில் பரிசு வழங்கப்படுகிறது! வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட, போட்டியிட்டுத் தோற்பது பன்மடங்கு உயர்வென்று நினையுங்கள்! வீழ்வது தோல்வியென்று யார் சொன்னது நண்பா? வீழ்ந்த நீ திரும்ப எழுந்து விடாமல் இருப்பதே பெருந்தோல்வி! புலியின் பதுங்கல், பாய்ச்சலுக்கு தான், பயத்தினால் அல்ல! உன் தோல்வியும் கூட வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!